இந்தோனேசியாவில் அச்சே என்ற மாகாணத்தில் ஷரியத் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில், உறவினர் அல்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் பிற ஆண்களுடன் வெளியில் செல்ல முடியாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
இந்த நிலையில், அங்குள்ள பிர்யூன் மாவட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணிக்கு பின்னர், பெண்கள் ஹோட்டல்களுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் இனிவரும் காலங்களில் இந்த விதிமுறைகளை மீறுவோர் கடும் சட்ட நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.