84 வயதான மூதாட்டி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், கொடூரமாகக் கொலை செய்த சிறுவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. 14 வயதான குறித்த சிறுவன் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
''டோரோதிமயே நீல்'' என்ற 83 வயதான மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற சிறுவன், அவரைப் பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், கொலை செய்து விட்டு தப்பிச்ச சென்றுள்ளான்.
இது குறித்த விசாரணைகளின் போதே, குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.