இந்த வாரம் பிக் பொஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஸ்வர்யா வெளியேற்றப்படலாம் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று கமல் அவர் காப்பாற்றப்படுவதாக அறிவித்தது ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
மேலும் இன்று பிக்பொஸ் போட்டியாளர்கள் பலரும், மும்தாஜ் தான் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் சென்ட்ராயன் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தது அவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
இந்த வெளியேற்றத்தை எதிர்பார்த்திருக்காத ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஐஷ்வர்யா- மும்தாஜ் இருவரும் தப்பித்தது எப்படி? என கேள்வி எழுப்பும் அதே நேரம், இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெறுப்படையச் செய்வதாக பலர் தமது சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.