அமெரிக்காவை தாக்கவுள்ள புளோரன்ஸ் சூறாவளி பலரின் உயிரைப் பறிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் சுமார் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சூறாவளி அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை தாக்க உள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அட்லாண்டிக்காவில் உருவாகிய சூறாவளி, தற்போது அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சூறாவளி அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவைத் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி அதி சக்தி வாய்ந்தது என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.