கொள்வனவு செய்த எண்ணெய் பக்கட்டில் அழுகிய நிலையில் எலியொன்று காணப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் சேலம் மாவட்டம் பைத்தூர் கிராமத்தில் பதிவாகியுள்ளது. குறித்த எண்ணெய் பக்கட்டை கொள்வனவு செய்தவர் இது குறித்து காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து அங்குள்ள உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.