ஜேர்மனியில் 7 வயது குழந்தைகள் பெற்றோருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
7 வயது குழந்தைகளா? ஆர்பாட்டமா? இது என்னடா புது வில்லங்கம் எண்டு யோசிக்கிறீர்களா?
காரணம் இல்லாமல் தோரணம் ஆடாது பாருங்க. சரி நாங்க விசயத்துக்கு வருவோம்.
ஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள 7 வயது சிறுவர்கள் தமது பெற்றோர்கள் எந்த நேரமும் தொலைபேசியிலேயே இருப்பதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நாங்கள் போராட்டத்தில் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை மட்டும்தான் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என எழுதப்பட்ட பதாதைகளை சுமந்து கொண்டு தமது எதிர்ப்பை மேற்கொண்டனர்.
7 வயதான எமில் என்ற சிறுவனே இந்த போராட்டத்திற்கு தலைமை தங்கினான். அத்துடன் குறித்த சிறுவன் கூறுகையில், இந்த போராட்டத்தின் பின்னராவது பெற்றோர்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்தி, தொலைபேசியில் அதிகமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தான்.
7 வயது சிறுவர்களின் இந்த போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சிறுவர்கள் கூறும் கருத்து நியாயமானது என்று தெரிவிக்கும் பலரும், பெற்றோர்கள் நிச்சயமாக தங்களை மாற்றி குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.