மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மாயமான MH370 விமானம் எவ்வாறு மாயமானது என்பது தொடர்பான ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், பீஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்தது.
விபத்துக்குள்ளாகிய அந்த விமானத்தை கண்டறியும் நடவடிக்கையில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டன. ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில், தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்தன.
இந்நிலையில் விமானிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் MH370 விமானம் எப்படி விபத்துக்குள்ளாகியிருக்கும் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆவணப்படத்தில் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விமானம் நேரடியாக கடலுக்குள் விழுந்து நொறுங்குவது போன்று கட்டப்பட்டுள்ளது