நடிகை ரம்பாவிற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ரம்பா, அக்காலத்தில் கனவுக் கன்னியாக மிளிந்தார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் திரையுலகின் முன்னனி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர். 90களில் இளைஞர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் நடிகை ரம்பா.
இவர் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, லாவன்யா மற்றும் சாஷா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்து, அவருக்கு சமீபத்தில் கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது.
தற்பொழுது ரம்பா ஆண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். இதனை ரம்பா தனது டிவிட்டர் பக்கத்தில் ஆனந்தத்துடன் தெரிவித்துள்ளார்.