நாளை மகாளய பட்சய புண்ணிய நாள். நாளைய நாள் உங்களது முன்னோர்களை தொழுது புண்ணியம் செலுத்தும் சிறப்பை பெறுகிறது.
வறியவர்கள், வயோதிபர்கள், அங்கவீனமானவர்கள், மேலும் விசேட தேவை உடையவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் போன்றோருக்கு நீங்கள் உணவு, உடை போன்றனவற்றை வழங்கி, புண்ணியங்களை செய்தால் மிகுந்த பயனை பெறுவீர்கள் என்பது ஐதீகம்.
புரட்டாசி பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரையான நாட்களை மகாளய பட்சய புண்ணிய நாள் என்று அழைப்பர்.
இதில் உள்ள 15 நாட்களும் நம் முன்னோர்களை வணக்கவேண்டிய காலம் ஆகும். இந்த இரண்டு வார காலத்தில், ஒவ்வொரு நாளும் ஆச்சார்ய பெருமக்களுக்கு புண்ணியம் கொடுத்தால் சிறப்பான பலாபலன்களை அனுபவிக்க முடியும்.
இந்த நாட்களில் விசேடமாக முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்து, உணவும் நீரும் வழங்கினால் இது அவர்களை சென்றடைகிறது என்கிறது தர்ம சாஸ்த்திரம்.
அமாவாசை காலம் சிறப்பானது. அதிலும், மகாளய பட்சய புண்ணிய நாள் மேலும் அதீத சிறப்புக்களை கொடுக்கும்.
நீங்கள் இந்த நாட்களில் புண்ணியம் வழங்கும்போது, முன்னோர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மகாளய பட்சய காலத்தில் பரணி நட்சத்திரம் வரும் போது, நாம் தர்ப்பணம் செய்தாலே அது ஏழேழு தலைமுறைக்கும் புண்ணியமாக இருக்கும்.
எனவே நாளை வெள்ளிக்கிழமை. குறைந்தது உணவேணும் வழங்குங்கள். இது மிகப்பெரிய தர்ம காரியமாக இருக்கும்.
நாளைய நாளில் புண்ணியம் செய்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் புண்ணியம் செய்த பாக்கியத்தை பெற்று சிறப்பாக வாழுங்கள்.