சவால்களுக்கு மத்தியில் முழுமையான மாற்றத்தை நோக்கி RT+ I சர்வதேச தகவல் அறியும் தினமானது, இம்முறை இலங்கை மக்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தினமாகும்.
தகவல் அறியும் உரிமை எமது நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டதோடு நாட்டின் ஆளுகை தொடர்பாக கேள்வியெழுப்பும் அதிகாரத்தையும் இது மக்களுக்கு வழங்கியுள்ளது.
சர்வதேச தகவல் அறியும் தினத்தை குறிப்பிடுகையில்இ இம்முறை ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் (T+ISL) தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட சகல தீர்ப்புக்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட
தலைப்புக்கள், RT+ I விண்ணப்பங்கள் உள்ளடக்கிய பிரதேசம் என்ற வகைப்படுத்தலின் அடிப்படையிலமைந்த தரவுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்த தரவுத்தளத்தினை www.rtiwatch.lk இணைத்தளத்தினூடாக பார்வையிடலாம்.
சர்வதேச தகவல் அறியும் தினத்தை கொண்டாடும் அதேநேரம் எமது RT+I பயணத்தில் மைல்கற்களாக அமைந்த சில நிகழ்வுகளையும் நினைவுகூறவேண்டியது அவசியமாகின்றது.
வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழலை வெளிப்படுத்தியது முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் போன்ற பொது நிறுவனங்களின் தகவல்களை வெளிப்படுத்தல் தொடர்பாக தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்புக்கள் வரை அவ்வாறான சந்தர்ப்பங்களை குறிப்பிடலாம்.
அரச சேவையின் சகல மட்டங்களிலும் தகவல் அறியும் உரிமையை பார்க்கின்ற அதேநேரம், ஊழலை ஒழிப்பதற்கான ஒரு கருவியாகவும், அதேநேரம் அரச சேவையை செயற்றிறன் மிக்கதாகவும் மாற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அடிப்படை உரிமையை நடைமுறையில் பயன்படுத்துகையில் பொதுமக்களுக்கு பல தடைகள்
உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
RT+I சட்டம் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடுஇ அன்றிலிருந்து இன்றுவரை, அம்பாறை, மாத்தறை, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கொழும்பில் நிறுவப்பட்டுள்ள
RT+I மத்திய நிலையங்களினூடாக RT+I விண்ணப்பங்கள் 1457 ஐ சமர்ப்பிப்பதற்கு பொதுமக்களுக்கான T+ISL நிறுவனம் உதவியுள்ளது.
இந்த வெற்றியை பல்வேறு வடிவங்களில் நோக்க முடியும் என்பதோடு, தகவல்களை வழங்காது மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெறப்பட்ட சந்தர்ப்பங்களையும் குறிப்பிடலாம்.
இதனூடாக குறுகியகால பலன்கள் பெறப்பட்டதோடு RT+I சட்டத்தின் நீண்டகால நிலைப்படுத்தலின் தேவை கருதி தகவல்களை
பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அரச அதிகாரிகளை பயிற்றுவிப்பது மட்டுமன்றி எதிர்காலத்தில் தகவல் அறியும் உரிமையை எவ்வாறு சிறப்பாக செயற்படுத்த முடியும் என்பது தொடர்பாகவும் குறித்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு T+ISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர அவர்கள் ‘இலங்கையின் அரசியல் அழுத்தங்களினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அதிகாரத்தை ஒருபோதும் குறைத்துவிட முடியாது.
தங்களது தகவல் அறிந்துகொள்வதற்கான உரிமையை பொதுமக்கள் எந்தளவு பயன்படுத்தியள்ளார்கள் என்பதை நாம் கண்கூடாக அவதானித்துள்ளோம்.
கழிவுகளை அகற்றுதல் போன்ற பொது சேவைகளை செயற்றிறன் மிக்கதாக மாற்றியது முதல் காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊழலை வெளிப்படுத்துவது வரையில் RT+I சட்டம் மிகம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
RT+I I மேலும் குறிப்பிடத்தக்கவகையில் யதார்தத்திற்குட்படுத்துவதற்கு பொது அதிகாரசபைகளின் தாமாக வெளிப்படுத்தும் தகவல்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.