பாகிஸ்தானில் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார பிரச்சினையை சமாளிக்க அரசாங்கத்தின் 61 ஆடம்பர சொகுசு கார்கள், சென்ற கிழமை ஏலம் விடப்பட்டன. இந்த ஆடம்பர கார்களை ஏலம் விட்டதன் மூலம், அரசாங்கத்திற்கு ₹20 கோடி கிடைத்தது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் வீட்டில் வளர்த்து வந்த 8 எருமை மாடுகளும், 5 கன்றுகளும் ஏலத்தில் விடப்பட்டு, அரசாங்கம் ₹23 லட்சம் ரூபாயை ஈட்டியுள்ளது.
குறித்த மாடுகளையும் கன்றுகளையும் நவாஸ் ஷெரிஃபின் ஆதரவாளர்கள் கூடுதல் விலைக்கு விசுவாசம் காரணமாக ஏலம் எடுத்துள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஷெரிப்பின் ஆதரவாளர் குலாப் அலி ஒரு எருமையை ₹3.85 லட்சத்திற்கு வாங்கியுள்ளமை குறிபிடத்தக்கது.