பழங்களை சாப்பிடுவது உடலுக்கு மட்டுமல்லாது முகத்திற்கும் நல்லது.
ஆரஞ்சுப்பழம்
விட்டமின் C சத்து நிறைந்த இப்பழத்தினை சாப்பிட்டு ஆரஞ்சுப்பழச்சாற்றை அருந்தி வந்தாலே செல்களின் அமைப்பை பாதுகாத்து, வயதான தோற்றம் ஏற்படாமல் தடுத்து முகம் பொலிவுற ஆரம்பித்து விடும்.
பப்பாளிப்பழம்
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ள பழம் பப்பாளி .இப்பழத்தில் இருக்கும் பாப்பெயின் எனும் என்சைம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சரும நோய்கள் வருவதைத் தடுக்கிறது. அது மட்டுமல்லாமல் பாப்பாளிச்சாறு எடுத்து முகத்தில் பூசி வந்தால், முகம் பொலிவாகும்.
வாழப்பழம்
அனைவராலும் எளிதில் வாங்கக்கூடிய பழம் இது.இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் வாழைப்பழத்தில் அதிகம் நிறைந்திருப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசை வலியை தடுப்பதோடு வாழைப்பழத்தை பிசைந்து தினமும் 20 நிமிடம் பூசி வந்தால் முகம் பொலிவுறும் அத்தோடு வாழைப்பழ தோலின் உல் பகுதியையும் முகத்தில் பூசி 15 நிமிடத்தின் பின்பு கழுவலாம்.
எலுமிச்சைப்பழம்
சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சையில் , முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்களை நீக்கும் சக்தி அதிகம்.எலுமிச்சை சாற்றுடன் தேன் சேர்த்து மசாஜ் செய்தால், தோல் மிருதுவாகும்.
வெள்ளரி
ஆன்டிஆக்ஸிடன்ட் கொண்ட வெள்ளரியை வட்ட வடிவாக வெட்டி கண்மேல் வைத்து 20 நிமிடங்கள் கழிந்த பின், வெள்ளைத் துணியை நீரில் நனைத்து முகத்தைத் துடைக்க கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்கும். வெள்ளரி ஜூஸ் குடித்தால் இளமைத் தோற்றம் நீடிக்கும்.