தனது 2 மாதக் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பதிவாகியுள்ளது.
தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போது, மார்பகம் அதிகமாக வலித்தததாகவும் அதனாலேயே தான் குழந்தையைக் கொலை செய்து, பின்னர், உடலத்தை அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் வீசியதாகவும் மரணித்த குழந்தையின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.