சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள பான்ஜின் நகரில் உள்ள பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்து விழா ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் சிறப்பு என்னவென்றால், பாரம்பரியம் முதல் நவீன தொழில்நுட்பத்தை எடுத்துரைக்கும் விதமாக 83 விதமான அலங்கார விளக்குகள் கொண்டு இந்த பூங்கா அலங்கரிக்கப்பட்டள்ளது.
அது மாத்திரமின்றி புராணங்கள், வரலாற்று சம்பவங்களை ஞாபகப்படுத்தும் வகையிலும் அலங்கார விளக்குகள் காணப்படுகின்றன.
இரவு நேரத்தில் அந்த பகுதியில் இந்த பூங்காவின் அலங்கார வடிமைமைப்பு பார்ப்பவர்களை வசீகரிக்கிறது. இதனால் அழகிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த பூங்காவைகாண பலரும் அங்கு வருவதாக கூறப்படுகிறது.
சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ள இந்த வண்ண விளக்கு அலங்கார அரங்கங்கள், எதிர்வரும் அக்டோபர் 20 -ம் திகதி வரை காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.