பெண்களுக்கு முகத்தில் ,உதட்டின் மேல்புறத்தில், மற்றும் தாடையின் கீழ்ப்புறத்தில் முடிகள் வளர்வதை பார்த்திருப்போம்.சிலருக்கு வளர்ச்சி வீதம் குறைவாக இருக்கும் சிலருக்கு மிக வேகமாக வளரும்.
இதற்கு காரணம் என்னவென்றால் ஆண்களுக்கு உடலில் முடி வளரும் ஹோர்மோன்கள் சுரப்பதை போன்றே பெண்களுக்கும் சுரப்பதினாலே ,பெண்களுக்கு இவ்வாறான தேவையற்ற முடிகள் வளர்கின்றது.
சில எளிய இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால்,எதுவிதமான பக்க விளைவுகளுமின்றி பெண்களுக்கு தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்வதை தடுக்கலாம்.
சீனியுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துமுகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் முகத்தை கழுவ வேண்டும்.இதனை வாரம் ஒரு முறை செய்யவும்.
கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் முகத்தை கழுவ வேண்டும்.
சோள மாவு, சிறிதளவு சீனியை சம அளவு எடுத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து, அதனை முகத்தில் பூசினால் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் வளர்வது குறையும்.
கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்.
இவ்வாறு மேற்குறிப்பிட்டவற்றை பின்பற்றி வந்தால் முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க அழகு நிலையத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை.