''காதலர் தினம்'' படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறியப்பட்ட சோனாலி பிந்த்ரே(Sonali Bendre), புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மனம்திறந்து தன்கதையை பகிர்ந்துள்ளார்.
நடிகை சோனாலி பிந்த்ரேக்கு அண்மையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் அவர், உயிர் கொல்லி நோயான புற்றுநோயில் இருந்து விடுபட பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறார்.
இதனால், அவரது சிகிச்சைக்குப்பின் உற்சாகமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார். இவரது உடல் நிலை தொடர்பில் அவர் வெளியிடும் செய்திகள் மற்றவர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை கொண்டுவரும்படியாக அமைந்து வருகின்றன.
அண்மையில் சோனாலி பிந்த்ரே, தான் நம்பிக்கையுடன் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதாகப் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சோனாலி பிந்த்ரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு நல்ல நாட்களுக்கும் கெட்ட நாட்களும் வாய்த்தன.
சில நாட்களில் என்னுடைய விரலை அசைப்பது கூட மிகுந்த வலியாக உணர்ந்தேன். அப்போது என் உடல் நிலை மிகுந்த பின்னடைவை சந்தித்திருந்தது.
உடல் வலியில் இருந்து ஆரம்பித்து அதன்பிறகு மன வலியை அனுபவிக்க வேண்டும். இதனால் நிறைய கஸ்ரமான நாட்களை நான் அனுபவித்தேன். கீமோ சிகிச்சைக்குப் பின்னரான நாட்களே இப்படி மோசமாக அமைந்தது. அந்த சமயத்தில் சிரிப்பது கூட ரணம் மிகுந்ததாக இருக்கும்.
ஒவ்வொரு நிமிடமும் நான் என்னுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தப் போராட்டம் முக்கியமானது. இத்தகைய மோசமான நாட்களை நாம் ஞாபகம் வைத்திருத்தல் வேண்டும். எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்க உங்களை உந்தித் தள்ள வேண்டியதில்லை.
நான் சிறிது காலத்திற்கு அழுவதற்கும், வலியை உணர்வதற்கும், சுய பரிதாபம் கொள்ளுவதற்கும் என்னை அனுமதித்துள்ளேன். உணர்ச்சிகள் தவறானவை அல்ல.
எதிர்மறையான உணர்வுகளைக் கொண்டிருத்தல் தவறான செயல் அல்ல. ஆனால், ஒருகட்டத்திற்கு மேல் அவை உங்களை கட்டுப்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அந்தக் கட்டத்திலிருந்து வெளியே வருவதற்கு அதிகப்படியான சுய கவனம் வேண்டும். அத்துடன்,
உறக்கம் எப்போதும் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தவர், இப்போதும் கூட நான் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகிறேன். எப்போது வீட்டுக்கு மீளத்திரும்புவேன் என்று இருக்கு. இதுதான் என் இலக்கு என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.