சிங்கப்பூரில் இருந்து ஆந்திரா வரும் சோபியாவிற்கு, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் பொருத்தப்படும்.
முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்ட தலைப்புகளில் சோபியா குறித்த மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்த மாநாட்டில் பேசும் சோபியா, நிதித்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், IT அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
இதனிடையே, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோவான சோபியாவிற்கு Twitter மற்றும் Facebook கணக்குகள் உள்ளன.
மனிதர்கள் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் 48 தசைகளின் அசைவுகளை சோபியாவால் கொண்டுவர முடியும் என்று கூறப்படுகிறது.
குரலை உணர்ந்துகொள்ளும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள சோபியாவால், நமது முகங்களைப் படிக்க முடியும்.
இதற்காக சோபியாவின் கண்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை கணினி மூலம் செயல்படுகின்றன. இதன்மூலம் நாம் கேட்கும் கேள்விக்கு ஏற்ப சோபியா பதில் கூறுவார்.
ரோபோ சோபியாவிற்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.