பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாவாக தமது நாளாந்த சம்பளத்தைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
இதன்படி நேற்றைய தினம் பிட்டரத்மலை, ஹப்புத்தளை, தொட்டலாகலை போன்ற பகுதி தோட்டங்களை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு, தமது கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும்வரைக்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறும் என்பதையும் அம்மக்கள் முன்னிறுத்தி வருகின்றார்கள்.
இந்நிலையில், சூரியனும் இந்த வேதன அதிகரிப்பை வேண்டி நிற்கும் எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், போராட்டங்கள் தொடர்பிலான குரல்களையும் மூன்று வேலையும் பிரதான செய்திகள் வழியாக வெளியே கொண்டு வந்துகொண்டிருக்கிறான்.
மக்களின் குரலாக, அவர்களது அபிலாசைகளை வெளிப்படுத்தும் தளமாக தொடர்ந்தும் குரலெழுப்ப தயாராகவுள்ளான்.
அடிப்படை உரிமைகளில் ஒன்றான போதுமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் வரை, எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களோடு கரங்கொடுத்து, அவர்களது குரல்களையும் கோரிக்கைகளையும் உலக முடிவுவரை கொண்டு செல்வோம்.
மேலும், இது தொடர்பிலான செய்திகள், காணொளிகளை எமது இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதனூடாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.