''வாயாடி பெத்தபுள்ள'' பாடலுக்கு வாயடைத்துப் போகும் அளவுக்கான அன்பை ரசிகர்கள் தந்திருக்கிறார்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் சிலாகித்துள்ளார்.
'கனா'' படத்தில் இடம்பிடித்த ''வாயாடி பெத்த புள்ள'' பாடல் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ''கனா'' படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை, ஜிகேபி எழுதியுள்ளார்.
இந்த பாடலில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா opening கொடுக்க, சிவகார்த்திகேயன், வைக்கோம் விஜயலட்சுமி இருவரும் இணைந்து பாடியிருந்தனர்.
இந்த இனிமையான பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த பாடலுக்கான ஆதரவு குறுகிய காலத்தில் அதிகளவில் பெற்ற ரகசியத்திற்கான காரணம் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தான். அவரின் செல்லமான இனிமை சொட்டும் குரல் அதிகளவிலான பார்வையாளர்களை இந்த பாடல் பக்கம் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் இந்த பாடல் குறித்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், இந்தப் பாடல் இப்போது Youtubeபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்குப் பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பாடலைப் பாடிய வைக்கோம் விஜயலட்சுமிக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையைக் கொண்டு வந்த என் நண்பரும் திரைப்பட இயக்குநருமான அருண்ராஜா காமராஜுக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்" என்கிறார் சிவகார்த்திகேயன்.