லண்டனில் சீக்கிய ராணியின் பச்சை மரகத கல் மற்றும் முத்துக்களால் ஆன அட்டியல் 1¾ கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
கடந்த 1843 ஆம் ஆண்டில் பஞ்சாபை ஆண்ட மன்னர் ரஞ்சித்சிங்கின் மனைவி ஜிந்தன் கவுர். மகாராஜா ரஞ்சித்சிங், ஆங்கிலேயருடன் போரிட்டு தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து ராணி ஜிந்தன் கவுர் அங்கிருந்து தப்பி நேபாள தலைநகர் காத்மாண்டுக்குச் சென்றார்.
அங்கு அவரை நேபாள மன்னர் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தார். பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து சென்றார். அப்போது தன்னுடன் விலை உயர்ந்த அட்டியலையும் எடுத்துச் சென்றார். பச்சை மரகத கல் மற்றும் முத்துக்களால் ஆன அந்த அட்டியல் கலை நயத்துடன் அமைந்ததாகும்.
அந்த அட்டியல் லண்டனில் ஏலம் விடப்பட்டது. அது கடுமையான போட்டிக்கு பின் கோடியே 80 லட்சத்துக்கு விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.