பணம் தர மாட்டேன் எனக் கூறிய தாயை, கோரமாகக் கொலை செய்த மகனைப் பற்றிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள நபர், குடி பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில் அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.
எனினும் குடிப்பதற்கு பணம்தர மாட்டேன் எனக் கூறிய தாயை, அவரது மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.