அமெரிக்காவில் IT துறையில் பணியாற்றிவரும் சாகச தம்பதிகளின் மரணம், அனைவர் மனங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் New York நகரில், IT துறையில் விஷு விஸ்வநாத் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரும் தம்பதிகளாக பணியாற்றி வருகின்றனர்.
விஸ்வநாத்க்கு தற்போது வயது 29. முப்பது வயதையுடையவர் மீனாட்சி. இவர்கள் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள். கல்விகற்கும் போதே இருவரும் காதலர்கள். இந்தக் காதல் இவர்களை திருமணத்தில் சேர்த்தது.
திருமணம் ஆன பின்னர், அமெரிக்காவில் தொழில் நிமித்தம் குடியேறினார்கள்.
இவர்கள் இருவரும் சாகசம் செய்வது சுற்றுலா செல்வது என்று தங்கள் நாட்களை அழகாக கழித்து வந்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் சுற்றுலா செல்வது இவர்களது பொழுது போக்காகவே இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா தலமான யோசிமிட் (Yosemite National Park )
தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்றனர்.
நீர்வீழ்ச்சி மற்றும் பல அழகிய காட்சிகளை கண்டு கழித்த இருவரும் அடுத்தாக ''800 '' அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றுள்ளனர். அந்த மலையில் 'Taft Point '' என்ற பகுதி அதிக உயரம் கொண்ட இடம்.
இந்த மலை உச்சி முனையில் புகைப்படம் எடுக்க அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருவது வழமை.
அந்த இடத்துக்கு சென்ற விஷு மீனாட்சி தம்பதிகளுக்கு தமது வாழ்வே அங்குதான் முடியப்போவது அறியாது அங்கு சென்றுள்ளனர்.
குறித்த இடத்திற்கு சென்ற அவர்கள் அந்த மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த எதிர்பாராத அனர்த்தம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை வர வைத்துள்ளது.
இந்த நிலையில், குறித்த தம்பதிகளின் உடலங்களை பள்ளத்தில் இருந்து மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.