இந்தியாவின் முன்னாள்மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்துச் செய்துள்ளது.
ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கில், ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி உள்ளிட்டோர் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வாங்கிய சொத்துகளை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இவர்கள் மீது லண்டனில் இந்திய ரூ. 5.37 கோடி சொத்து மற்றும் ரூ. 80 லட்சம் மதிப்பிலான சொத்துகளும், அமெரிக்காவில் ரூ. 3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டதாக குற்றசாட்டு சுமத்தப்பட்டது.
இதற்கு ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம் அளிக்கவேண்டும். இதற்கான நோட்டீசை வருமான வரித்துறை அனுப்பியிருந்தது.
இதனிடையே கருப்புப் பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வருமான வரித்துறை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.