நடிகர் சிவகுமார் போன்றே, நடிகர் மம்முட்டியிடம் Selfie எடுக்க சென்ற வாலிபர்களுக்கு மம்முட்டி அறிவுரை சொல்லி அனுப்பியிருக்கும் சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது.
அண்மையில் மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றின் திறப்புவிழாவுக்கு சென்ற சிவக்குமார், அங்கு செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் மொபைலை தட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது நடிகர் மம்முட்டியும் இதே போன்றதொரு பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார். ஆனால் சிவகுமார் போன்று செயற்படாது, அவர் சற்று சமயோசிதமாக நடந்துகொண்டமை அவர் மீது மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மம்முட்டி மசூதிக்கு சென்றிருந்தார். அப்போது அவரை கண்ட ரசிகர்கள் அவருடன் தங்கள் எண்ணத்தில் Selfie எடுத்துள்ளனர்.
இதன்போது, மம்மூட்டி எதுவும் பேசாமல், நடந்து சென்றாலும் அவருடன் வந்தவர்கள் அந்த மொபைல்களை பறித்து வைத்துக்கொண்டு பின்னர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், மசூதியை நெருங்கியபின் மம்மூட்டி குறித்த இளைஞர்களை அழைத்து, "செல்ஃபி எடுப்பதில் தவறில்லை. ஆனால், மசூதி போன்ற வழிபாட்டுத்தலங்களில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தமது பக்கம் தவறு இருந்ததை உணர்ந்த குறித்த இளைஞர்கள் தமது செல்போனை அணைத்துவிட்டு வழிபாட்டுக்காக மசூதிக்குள் நுழைந்துள்ளார்கள்.