இந்த நிலையில் விபத்துக்கு உள்ளாகிய லயன் ஏர்லைன் விமானத்தை இயக்கிய இந்திய விமானி பாவ்யா சுனேஜாவின் உடலம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை இந்திய மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் JD610 என்ற விமானம் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி காலை புறப்பட்டது.
இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் தகவல் தொடர்பை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.
இந்நிலையில், விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. இந்த தேடுதலில் விமானத்தை இயக்கிய இந்திய விமானி பாவ்யே சுனேஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து உடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தீவிர தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதாக, இந்தோனேஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.