பொலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரின் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில், மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில் நடைபெற்றது.
கொங்கினி கலாச்சார முறைப்படியும், அடுத்த நாள் சிங் கலாச்சாரப்படியும் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.
பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா இவர்களின் திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில் நிலையில் திருமணம் தொடர்பான புகைப்படங்களை இவ்விருவரும் தத்தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
இதில், திருமணத்தின்போது தீபிகா படுகோன் கை விரலில் அணிந்திருந்த கல் வைத்த மோதிரத்தின் விலை குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே கிளம்பியது.
இந்த நிலையில் இதுகுறித்து பொலிவுட்டின் முக்கிய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதில் தீபிகா அணிந்திருக்கும் மோதிரம் சுமார் 1 .3 கோடியிலிருந்து 2.7 கோடியாக இருக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.