மலேசிய விமான நிலையத்தில் சுமார் 7 மாதங்கள் தங்கியிருந்த நிலையில், சிரிய அகதி ஒருவர் தற்போது கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிரியாவைச் சேர்ந்த ஹசன் அல் கோடார் (Hassan al-Kontar) என்பவர் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பிறிதொரு நாட்டுக்கு ஹசன் அல் கோடார் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரை மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு விசா காலம் முடிந்து விட்டதாகத் தெரிவித்து அவருக்கான அனுமதியை மறுத்திருந்தார். இதன் காரணமாக
புதிய விசா கிடைக்கும் வரை விமான நிலையத்திலேயே அவர் தங்க வைக்கப்பட்டார்.
இவ்வாறாக சுமார் ஏழு மாதங்கள்வரை விமான நிலையத்திலேயே அவர் தங்கி இருக்க நேர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பின்னர் இந்த வாரம் கனடாவிற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஹசன் விமான நிலையத்திலிருந்து வெளியேற உதவிய கொலம்பிய முஸ்லிம் சங்கம் கூறும்போது, நாங்கள் ஹசன் தொடர்பில் கவனித்தோம். அவர் மலேசிய விமான நிலையத்திலேயே தங்கி இருப்பதாகவும், வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லாமல் இருக்கிறார் என்றும், எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதன் காரணமாக ஹசனுக்கு உதவும் செயற்பாட்டில் நாம் ஈடுபட்டோம்.
இதனைத் தொடர்ந்தே ஹசனின் ஆவணங்கள் தயாராகி, அவர் கனடா அனுப்பப்பட்டார்.
ஆனால் ஹசன் மீண்டும் சிரியா செல்ல சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து ஹசன் கூறும்போது, எனக்கு சிரியா செல்ல விருப்பமில்லை. நான் ராணுவத்தில் சேர விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.