சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பரோட்டாவின் விலை அதிகம் என்பதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், அந்த உணவகத்தையே அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்திற்கு நேற்றிரவு சிலர் சாப்பிடச் சென்றனர். அப்போது கடையில் பரோட்டா விலை என்ன? என கேட்டுள்ளனர்.
பரோட்டாவின் விலையைக் கேட்டதும், விலை அதிகமாக இருப்பதாக கூறி அவர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கலவரம் நடத்தியவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.