தனது மனைவியை பழிதீர்க்க வேண்டும் என்பதற்காக, தனது குழந்தையை கற்பழித்த கொடூரனைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண்பாடுகள் இடம்பெற்று வந்தன.
இதே போன்றே நேற்று முன் தினம் தனது மனைவியிடம் அவர் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
மனைவி வெளியே சென்ற ஆத்திரத்தில், அந்த கொடூரன் குடித்துவிட்டு தனது 3 வயது மகளை கற்பழித்துள்ளார். சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மனைவி குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.