தற்காலத்தில் பலர் உடல் ஆரோக்கியத்திற்காக அவரவர் சிறுநீரைக் குடிப்பதாக, பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனால் இந்தப் பெண்ணோ, தான் செல்லமாக வளர்க்கும் சிறுநீரைக் குடிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த குறித்த பெண், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது, தனது நாய்க்குட்டி மீது கொண்ட அதீத அன்பாலே இவ்வாறு அதன் சிறுநீரைக் குடிப்பதாகக் கூறியுள்ளார்.
சுமார் 5 வருடங்களாக இவ்வாறு நாய்க்குட்டியின் சிறுநீரைக் குடித்து வருவதாக கூறிய அந்தப் பெண், இதனால் தனக்கு எந்தவித உடற் பிரச்சனைகளும் வந்ததில்லை என்று சிரித்தபடி, கூறியுள்ளார்.