ராஜநாகத்தை வைத்து வித்தைக் காட்டியவருக்கு, திடீரென அந்தப் பாம்பு கடித்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தாய்லாந்தில் பதிவாகியுள்ளது. தாய்லாந்தில் ராஜ நாகத்தை வைத்து நபர் ஒருவர் வித்தை காட்டி கொண்டிருந்த போது திடீரென பாம்பு கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தை சேர்ந்த யுத்தபோங் சைபூடீ என்ற 35 வயது நிறைந்த ஒருவரே, இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள், அங்கும் இங்குமாக பதற்றத்துடன் ஓடியுள்ளனர்.
அத்துடன் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட நபரை விரைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.