இது குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது சுவாமி நிதித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டத்திலுள்ள பகுதியில், ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா, பெண் பக்தர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இவர் மீது பல பெண்கள், பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் பாலியல் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாகவும், நேபாளம் வரை சாலை மார்க்கமாகவும் அதன் பின் பிரிட்டன் ஆதிக்கத்திலுள்ள, 'கெய்மன்' தீவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் இவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதற்கு நித்யானந்தாவின் ஆசிரம நிர்வாகிகள், விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.