யாழ்ப்பாணத்தில் செய்கை பண்ணப்படும் திராட்சைக்கு கிராக்கி அதிகம். இலங்கை சந்தையில் யாழ்ப்பாண திராட்சைக்குதான் அதிக வாய்ப்பு இருந்து வருகிறது.
சுவையான யாழ் திராட்சை புண்ணாலைக்கட்டுவன், உரும்பிராய், இளவாழை, அளவெட்டி, அச்சுவேலி, கரவெட்டி, நெல்லியடி, உடுவில், புத்தூர், கோப்பாய், கைதடி, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த மண்ணின் ஸ்பெஷல் என்னவென்றால், திராட்சை பயிரிட உகந்ததாக அங்கு செம்மண் இருப்பதே.
யாழ்ப்பாணத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திராட்சை பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த திராட்சை செய்கையையே தமது தொழிலாக கொண்ட விவசாயிகள் பெரும் சோதனைக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.
திராட்சையை நோய் தாக்குவதன் காரணமாக அங்கு திராட்சை அழிவடைந்து வருவதாக கவலை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.
இங்கு கடந்த ஐந்து வருடங்களாக நோய்த்தாக்கம் காணப்படுவதாகவும், இதனால் திராட்சை
செய்கையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றார்கள்.
இந்த நிலையில் இந்த நோய் தாக்கம் தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளபோதும், அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.