அமெரிக்காவைச் சேர்ந்த குறித்த நபர், தனது கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறித்த பாரம்பரிய வாள்களைக் கொண்டே சிகை அலங்காரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நபர் கருத்து வெளியிடும் போது, தனக்கு ஒரு முதியவர் மன்னர் காலத்து வாள்களை அன்பளிப்பாக வழங்கியதாகவும், அந்த வாள்களைக் கொண்டு தலைமுடியை வெட்டும் போது, மிக எளிமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
குறித்த நபர் தமது வாடிக்கையாளர்களுக்கு சிகை அலங்காரம் செய்தும் காட்சியை பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றார்.
இவரது காணொளிகளைப் பார்த்த பல இளைஞர்கள், தற்போது அவரது கடைக்கு விரைந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.