இதுவரையிலும் சுமார் 15000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ஒருவர் இயற்கை எய்தியமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தம்மிடம் வரும் அனைத்து பெண்களிடமும் கட்டணம் அறவிடாது, இந்த மூதாட்டி இலவசமாகவே பிரசவம் பார்த்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச்ச சேர்ந்த இந்த மூதாட்டி, பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்த இவர், காலமாகும் போது 98 வயதாகும்.
தனது பாட்டியிடம் இருந்து பிரசவம் பார்க்க கற்றுக் கொண்டமூதாட்டி, இந்தத் தொழிலை மிகவும் உன்னதமாக நேசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.