சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட, திரைப்படத்தை அடுத்து மற்றுமொரு திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய படத்திற்கு ''நாற்காலி'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வெளிவரவில்லை. இந்த படத்திற்கான பெயரை வைப்பதற்காக படக்குழுவினர் தற்போது ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படத்தில் நடித்தார். இந்த நிலையில், நடிகர் ரஜினி காந்த் குடும்பத்தாருடன் அமெரிக்கா சென்று ஓய்வெடுத்து வருவதாக செய்திக வெளிவந்துள்ளன.
இவர் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பிய பின்னர் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.