மதுபானம் மற்றும் புகையிலை பொருட்களின் பாவனையால் இலங்கையில், வருடத்திற்கு 80 ஆயிரம் பேர் மரணிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அத்துடன் ஆயிரக்கணக்கானவர்கள் புற்று நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுக்க, தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கினை, மதுபானத்திற்காக செலவிடுகின்றமை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.