முதலாம் உலகப் போரின் போது புதையுண்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலின், எஞ்சிய பாகங்கள் சில பிரான்ஸின் கடற்கரைப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப்போரின் போது, ஜெர்மன் நாட்டிற்கு சொந்தமான யுசி-61 என்ற நீர்மூழ்கிக்கப்பல் கூட்டுப்படையினரால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், கடலினுள் மூழ்க்கியது.
போர் முடிவடைந்த நிலையில் அந்த கப்பல் கைவிடப்பட்டதால் அதனை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 1930 ஆம் ஆண்டு இந்த நீர்மூழ்கி கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட யுசி-61 நீர்மூழ்கிக் கப்பலின் எஞ்சிய பாகங்கள் பிரான்ஸ் கடற்பகுதிகளில் கிடைத்துள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன.
கப்பலின் எஞ்சிய பாகங்கள், வடக்கு பிரான்ஸ் துறைமுகமான விஸாண்ட் பகுதியில் வைத்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.