இந்தியாவின் கேரள மாநிலம், செங்கானுரை சேர்ந்தவர் 29 வயதான software இன்ஜினியர் விஷ்ணு விஸ்வநாத். இவரது மனைவி மீனாட்சி மூர்த்தி. விஷ்ணு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிஸ்கோ இந்திய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கணவன் மனைவி இருவருக்கும் மலையேற்றத்தில் ஈடுபடுவது என்றால் நிறையவே பிடிக்கும்.
கடந்த வருடம் ஓக்டோபர் 25ம் திகதி அமெரிக்காவின் பிரபல யோஷ்மைட் தேசிய பூங்காவுக்கு சென்ற தம்பதிகள் அங்குள்ள 800 அடி உயர மலை உச்சிக்கு சென்று புகைப்படம் எடுத்து அதை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட நினைத்தனர்.
இவ்வாறாக இருவரும் மலை உச்சிக்கு சென்று செல்ஃபி எடுக்க முயன்றபோது, 800 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்து அநியாயமாக பலியாகினர்.
இவர்கள் பலியாகிய சம்பவம் தொடர்பில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட இவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அதில், இருவரும் விபத்துக்கு முன்பாக மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது.
இறந்த தம்பதியின் உடலில் alcohol இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், விபத்து நடந்து நீண்ட நாட்களின் பின்னர் உடற்பாகங்கள் மீட்கப்பட்டமையால் அவை அழுகி விட்டதால், அவர்கள் எவ்வளவு மது அருந்தினர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறித்த பிரேத பரிசோதனையை மேற்கொண்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.