Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
மலை உச்சியில் செல்ஃபி எடுத்தபோது, விழுந்து பலியாகிய தம்பதிகளின் இறப்பிற்கு இதுதான் காரணம்

Sooriyan gossip - மலை உச்சியில் செல்ஃபி எடுத்தபோது, விழுந்து பலியாகிய தம்பதிகளின் இறப்பிற்கு இதுதான் காரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,029 Views
இந்திய தம்பதி ஒன்று அமெரிக்காவில் மலை உச்சிக்கு சென்று செல்ஃபி எடுத்தபோது தவறி விழுந்து பலியாகிய சோகமான சம்பவம் ஒன்றை நாம் அண்மையில் அறிந்திருந்தோம். இவர்களின் இறப்பிற்கு மதுப் பாவனையே காரணம் என்று தற்போது வெளியாகிய பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகின்றது. 

இந்தியாவின் கேரள மாநிலம், செங்கானுரை சேர்ந்தவர் 29 வயதான software இன்ஜினியர் விஷ்ணு விஸ்வநாத். இவரது மனைவி மீனாட்சி மூர்த்தி. விஷ்ணு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிஸ்கோ இந்திய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கணவன் மனைவி இருவருக்கும் மலையேற்றத்தில் ஈடுபடுவது என்றால் நிறையவே பிடிக்கும்.
கடந்த வருடம் ஓக்டோபர் 25ம் திகதி அமெரிக்காவின் பிரபல யோஷ்மைட் தேசிய பூங்காவுக்கு சென்ற தம்பதிகள் அங்குள்ள 800 அடி உயர மலை உச்சிக்கு சென்று புகைப்படம் எடுத்து அதை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட நினைத்தனர்.

இவ்வாறாக இருவரும் மலை உச்சிக்கு சென்று செல்ஃபி எடுக்க முயன்றபோது, 800 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்து அநியாயமாக பலியாகினர்.

இவர்கள் பலியாகிய சம்பவம் தொடர்பில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட இவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அதில், இருவரும் விபத்துக்கு முன்பாக மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது.

இறந்த தம்பதியின் உடலில் alcohol இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், விபத்து நடந்து நீண்ட நாட்களின் பின்னர் உடற்பாகங்கள் மீட்கப்பட்டமையால் அவை அழுகி விட்டதால், அவர்கள் எவ்வளவு மது அருந்தினர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறித்த பிரேத பரிசோதனையை மேற்கொண்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top