2019ஆம் ஆண்டில், உலகின் மிக மோசமான 10 சுகாதார அச்சுறுத்தல்களை, உலக சுகாதார நிறுவனம் பட்டியல்படுத்தியுள்ளது. ஹெச்ஐவி, எபோலா, டெங்கு, லேசா மாறும் காற்று மாசு பாடு,பருவநிலை மாற்றம், தடுப்பூசி போடுவதில் மக்கள் காட்டும் தயக்கம் உள்ளிட்டவை, மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களாக உள்ளன.
இந்த பட்டியலில், நுண்கிருமிகள், மருந்துக்கு கட்டுப்படாமல் போகும் நிலையும் இடம்பெற்றுள்ளது.
அன்ட்டிபயாட்டிக் மருந்துகளை வரைமுறையில்லாமல் பயன்படுத்தும் நிலை தொடருமானால், நிமோனியா, டி.பி., போன்றவற்றைக் குணப்படுத்துவது கடினமாக இருந்த பழங்கால நிலைக்கு திரும்ப நேரிடும் என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அன்ட்டிபயாட்டிக் மருந்துகளை வரைமுறையில்லாமல் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதோடு, மறைமுகமாக உணவுச் சங்கிலி மற்றும் நீரிலும் கிருமிகள் நுழைந்து விடும் நிலை உள்ளது.