Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
வரலாறு காணாத பனிப்பொழிவால் இதுவரை ஏழு பேர் மரணம்..

SooriyanFM Gossip - வரலாறு காணாத பனிப்பொழிவால் இதுவரை ஏழு பேர் மரணம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,309 Views
வரலாற்றில் என்றும் இல்லாதவாறு , அமெரிக்காவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவால் இதுவரை ஏழு பேர் மரணித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பனிப்பொழிவால் அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களின் இயல்பு நிலை உருகுலைந்துள்ளது. 

இந்த சூழலை, அமெரிக்காவில் துருவச் சூழல் என பலர் அழைத்துள்ளனர். அமெரிக்கா, கடுங்குளிரை எதிர்கொள்ள இருப்பதால், அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளன.

ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக அமெரிக்காவிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், பல வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விமானத்தில் இருந்து பனிக்கட்டியை அகற்றும் பணியாளர்கள், அண்டார்டிக்காவின் பகுதிகளை விட, அதிக
குளிரான இடமாக, அமெரிக்காவின் சிகாகோ இருக்குமென என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிகாகோவிலுள்ள மக்கள், வெளியே செல்ல வேண்டாமென சிகாகோ ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். .
இதனிடையே அமெரிக்காவின் மேற்கு திசையில் தட்ப வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என்று, அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

ஆனால், வேகமாக வீசும் காற்று, கடுங்குளிராக இருக்கும் என்பதால், சில நிமிடங்களில் குளிர் நடுக்கம் ஏற்படலாம் என்று, தேசிய வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கடுங்குளிரை 25 கோடி மக்கள் சந்திக்கவுள்ளதாகவும், 90 மில்லியன் பேர் -17 டிகிரி செல்சியஸ் வானிலையை எதிர்கொள்ள உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த வார இறுதியில், -28 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பநிலையை 20 மில்லியன் அமெரிக்க மக்கள் அனுபவிக்கவுள்ளனர்.

மேற்கு மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸிலும், தொலைதூர மாநிலங்களான அலபாமா மற்றும் மிஸிசிப்பியிலும் தற்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதுவொரு வரலாற்று பதிவாக இருக்கும் என்று இல்லினாய்ஸ் தேசிய வானிலை மையத்தின் வானியல் ஆய்வாளர் ரிக்கி கெஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

தொடரும் பனிபொழிவு காரணமாக 2 ஆயிரத்து 200 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் பனியால் சூழப்பட்டிருப்பதால் அவற்றிற்கு நெருப்பு வைத்த பின்னரே தொடரூந்து சேவை இடம்பெறுகிறது.

இதனால் அமெரிக்காவின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top