அரசியல் பக்கம் வரவே மாட்டேன் என்று நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தி நடிகர் அக் ஷய்குமார், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் உள்ளிட்ட 70 பிரபலங்களை களமிறக்க பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்திருந்தன.
பாரதீய ஜனதா கட்சி கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசுக்கு எதிராக போராடிவருகின்ற நிலையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை கையாண்டு வருகின்றது.
இந்த தேர்தலில் மலையாள பிரபல நடிகர் மோகன்லாலை களமிறக்க பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்த வதந்தியை உறுதி செய்யும் முகமாக கேரள பாஜக தலைவர் ராஜகோபால் அளித்த பேட்டியில், 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட மோகன்லாலிடம் பேசி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியலில் குதிக்கும் திட்டமில்லை எனக்கு இல்லை என்று நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார்.
“எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. நான் தொடர்ந்து நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். இந்தத் துறையில் நான் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. ஆனால் அரசியலிலோ உங்களை நம்பி ஏராளமான பேர் இருப்பார்கள். எனவே அது எளிதானது அல்ல. எனக்கு அதுபற்றியும் தெரியாது. அரசியலுக்கு வரமாட்டேன். பாஜகவில் சேரும் விருப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.