திரையுலகின் பிரபல நடிகை ராதிகா, கணவர் சரத்குமார், மகள் ரயன் மிதுன், பேரனுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவின் மகள் ரயன் மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, அதனை பார்த்த ஒருவர், மிக கேவலமாக கலாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிவை பார்த்த, ராதிகாவின் மகள் ரயன் உடனடியாக அந்த நபருக்கு, தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
சரத்குமார் தனது இரண்டாவது மனைவியான ராதிகாவின் முதல் புருஷன் பொண்ணோட பையனுடன் குறித்த நபர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த ரயன் கொதித்தெழுந்து, ஒரு குழந்தையுடன் கணவரை பிரிந்து வருவதற்கு தனி தைரியம் வேண்டும். அப்படி வந்து சொந்தமாக ஒரு தொழிலை துவங்கி அதை வெற்றிகரமாக நடத்துவது சுலபமான காரியம் இல்லை என, கூறியதுடன், தன் அம்மா ராதிகா பட்ட கஷ்டங்களை விவரித்துள்ளார் .
மேலும் அப்பா சரத்குமார் தன்னை ஒரு நாளும் வேற்று மகளாக நினைத்தது இல்லை. தன் சொந்த மகளாகவே பாசம் காட்டுவதாகவும், அதற்கும் ஒரு மனம் வேண்டும் என்றும், ரயன் தன் அப்பா சரத்குமார் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சரத்குமார், ஆசிர்வதிக்கப்பட்டவர். அவருக்கு அருமையான மனைவி, 4 பிள்ளைகள், ஒரு பேரன், அவர் மீது பாசம் வைத்திருக்கும் குடும்பம் உள்ளது என்று கூறி, தனது அப்பாவை கலாய்த்த அந்த நபர் முகம் சுளிக்கும் வகையில், ரயன் பதிவிட்டுள்ளார்.