ஆரோக்கியம் என்பது இன்றைய உலகில் மிகவும் அரிதாகவே பேணப்படுகிறது. எமது உடலில் கலக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற சிறந்த வழிமுறைகள் உள்ளன. நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், ஈரல், இரத்தம், நுரையீரல்களின் செயற்பாடுகள் மூலம் வெளியேற்ற முடியும். இந்த செயற்பாடுகளின் போது நச்சுக்கள் முற்றாக வெளியேற்றப்படாத போது, அவை உடலில் படிவடைந்து விடுகிறது. நீண்ட காலம் நச்சுப் பொருட்கள் படிவதனால், உடலின் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் உண்டாகும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நச்சுக்களை வெளியேற்ற சில வழிமுறைகள் உள்ளன. அதிகமான குடிப்பழக்கம் உள்ளவர்களின் உடலில் இருந்து அல்ககோலை வெளியேற்றும் செயற்பாடு, ஒரு வகையான நச்சுக்களை விரட்டும் முறையாகும்.
ஆரோக்கியமான உணவு, தொடர்ச்சியான உடற்பயிற்சி, குடிப்பழக்கம், தியானம் செய்தல் போன்ற செயல்பாடுகள் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவும்.
இதேவேளை பருப்பு மிகவும் ஆரோக்கியமான உணவாக அறியப்படுகிறது. இது இலகுவாக சமிபாடடைவதுடன், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நார்ப் பொருட்களையும் கொண்டுள்ளது. அத்துடன் இதில் விட்டமின் பியும், புரோட்டினும் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.
அத்துடன் சவ்வரிசி, உருளைக்கிழங்கு, பெருங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதும், நச்சுக்களி வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இந்த உணவுகளில் அதிகளவான விட்டமின் சி, கனியுப்புக்கள், மாபொருட்கள் என்பன உள்ளன. எனவே உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையான பொருட்களை இவை வெளியேற்றி,ஆரோக்கியமாக வாழலாம்.