உடைக்கவியலாளர் ஜமாலை சவுதி அதிகாரிகளே கொலை செய்துள்ளதாக ஐ.நா.குழு நடத்தி வெளியிட்ட முதலாவது விசாரணை அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
ஐ நா அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும் சவுதி, துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன'' என்று குறிப்பிடப்ப ட்டுள்ளது. இந்த நிலையில் ஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
சவுதி அரசை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் அவர் மீது புல்லட் பயன்படுத்த இருப்பதாக சல்மான் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதியின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான ஜமால் கஷோகிஜி, அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.
இந்த நிலையில் அவர் துருக்கியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. முதலில் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சவுதி பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து சவுதி இந்த கொலையை தாமே மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டது.
ஆனால், இதில் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இல்லை என்று கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.