இந்த நிலையில் நடிகர் சூர்யா இயக்கவுள்ள புதிய படத்தின் பூஜையில் சூர்யா, ஜோதிகா, ரேவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இதன்போதே, ஜோதிகா குறித்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா, இப்போது மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தெரிவு செய்து தீவிரமாக நடித்து வருகிறார். ஏற்கனவே நடித்து திரைக்கு வந்த ‘36 வயதினிலே’ நல்ல வசூலை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து மகளிர் மட்டும், பாலா இயக்கத்தில் நாச்சியார், மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம், மற்றும் காற்றின் மொழி, ஆகிய படங்களிலும் ஜோதிகா நடித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்து வரப்போகும் திரைப்படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்துள்ள கதையம்சத்தை கொண்டிருப்பதால் அந்த படத்திலும் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில், பிரபல நடிகை ரேவதி, யோகிபாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், ராஜேந்திரன், ஜெகன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கிறார். படத்தை 2டி என்டர்டெயின் மென்ட் சார்பில், நடிகர் சூர்யா தயாரித்துள்ளதுடன், இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இந்த படத்தின் பூஜை நிகழ்வுகள் சென்னையில் நேற்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, ஜோதிகா, ரேவதி, தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர பாண்டின் மற்றும் படத்தின் இயக்குனர் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.