முக்கியத்துவமான சந்தர்ப்பத்திலும் கூட, மாலை 6 மணிக்கு மேல், எமது வீட்டில் சினிமா பற்றி, தானோ அல்லது கணவரோ எந்த விஷயத்தையும் பேசவே மாட்டோம் என, நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போதுள்ள இளைஞர்களின் மனதில் அதிக விருப்புக்களை பெற்ற நடிகைகளில், சமந்தாவிற்கு தனித்துவமான இடமொன்று உள்ளது.
இந்த நிலையில், நடிகை சமந்தா அளித்த பேட்டியொன்றில் மாலை ஆறு மணிக்கு மேல், வீட்டில் சினிமா தொடர்பான விஷயங்களை பேசவே மாட்டோம் என கூறியுள்ளார். தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் சரி, குடும்ப வாழ்க்கைக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நான் மிகவும் கவனமாகவே இருப்பேன் என சமந்தா கூறியுள்ளார்.
நாம் சந்தோஷமாக இருக்கத்தான் உழைத்து சம்பாதிக்கின்றோம். வீட்டில் நுழைந்தால் ஒரு ஆனந்தமயமான சூழல் இருக்க வேண்டும். நானும், நாக சைதன்யாவும் ஒரே துறையில் இருக்கிறோம். கணவரின் மொத்த குடும்பமும், சினிமா துறையில் ஏதோ ஒரு வகையில் இணைந்துள்ளனர்.
ஆனால் வீட்டில் சினிமா பற்றி மட்டும் அதிகமாக பேச மாட்டோம். குறிப்பாக மாலை 6 மணி ஆகிவிட்டால், எல்லா சினிமா விஷயங்களையும் மறந்து என்னை பற்றி சைதன்யாவும், அவரைப் பற்றி நானும் மட்டுமே யோசிப்போம். எங்கள் வாழ்க்கையை பற்றி மட்டுமே சிந்திப்போம். சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே கழட்டி வைத்து விட்டு வந்து தான் உள்ளே வருவோம்.
அதனால் எங்களுக்கு தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்கி கொள்ள முடிகிறது. சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இருவரும் சேர்ந்து புதிய படமொன்றில் நடிக்கிறோம். ஆனாலும் வீட்டில் வந்து, பட விஷயங்கள் பற்றி பேசுவது இல்லை. படப்பிடிப்பு அரங்கில் பேசுவதோடு நிறுத்தி விடுவோம் என சமந்தா கூறியுள்ளார்.