இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த 15 வயதான சிறுமி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி, பள்ளிக்கு சென்று விட்டு அன்று மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
இது தொடர்பான விசாரணை கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் கீச்சலம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில், மனித எலும்புத் துண்டுகள் கிடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்ற போது, அங்கு புத்தகப்பை, சீருடை, தலைமுடி ஆகியவற்றை கண்டெடுத்துள்ளனர். பின்னர், கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போன சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என, காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை பார்த்தனர். பிறகு அவை தங்களுடைய மகள் பயன்படுத்திய பொருட்கள் இவை தான் என்று உறுதிப்படுத்தினர்.
இதனை அடுத்து பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரிவியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.