மெக்ஸிகோவில் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக 152 பாதிரியார்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிரியார்களின் இந்த மோசமான நடத்தை தொடர்பில் மெக்ஸிகோவில் தேவலாயம் ஒன்றின் பேராயர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒன்பது வருடங்களில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டமை காரணமாக, தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
பிரேசிலுக்கு அடுத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பது மெக்ஸிகோவில்தான். முன்னதாக, சில பாதிரியார்களும் பிஷப்புகளும் பாலியல் பலாத்காரச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று, போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னைபாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தப் பிரச்சினை பெரிதானது. இதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் அதிகரித்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.