வங்காள தேசத்தில் 1920 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விலங்குகள் நலச்சட்டம், விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் அறவிட வழி சமைத்து.
இந்த நிலையில் 1920 ஆம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. இது ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படுகிறது.
முறையான காரணங்கள் இன்றி, ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப் போடுவது தண்டனைக்குரிய குற்றம் என, இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறைச்சிக்காக விலங்குகளை கொலை செய்வது மற்றும் மத சடங்குகளுக்காக, விலங்குகளை பலி கொடுப்பது போன்றவற்றை இந்த புதிய சட்டம் குற்றமாக கருதவில்லை. இந்த சட்டம் விரைவில் அமுலுக்கு வரவுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.